Seeing in the distance
Translation in progress from www.parisurthar.com
Seeing in the distance
Translation in progress from www.parisurthar.com
இயேசு கிறிஸ்து பெத்தானியாவிலிருந்து எருசலேம் போகும் பொழுது வழியருகே கனியற்ற அத்திமரத்தைக் கண்டு சபித்ததை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 18.காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று. 19.அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. 20.சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21.இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22.மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் - மத்தேயு 21:18-22
இந்த பெத்தானியா என்பது எருசலேமுக்கு மிக அருகாமையில் இருக்கிற சிறிய கிராமம் - பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது - யோவான் 11:18
இந்த வழியருகே இருந்த அத்திமரமானது கனிகொடுக்காதிருக்கிற மக்களை தான் குறிக்கிறது, இது இயேசு கிறிஸ்து பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு போகிற வழியருகே இருந்தாலும், தன் உள்ளத்தால் அவருக்கு தூரமாய் இருந்ததாம், அதனால் தான் "அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு" என்று மார்க் எழுதியுள்ளார், அது மாத்திரம் இல்லாமல், நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் பொழுது எப்பொழுதும் கனி கொடுக்கிறவர்களாக இருக்க முடியும் - 12.மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. 13.அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. 14.அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள் - மாற்கு 11:12-14
20.மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21.பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். 22.இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 23.எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24.ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் - மாற்கு 11:20-24