It is most holy
Translation in progress from www.parisurthar.com
It is most holy
Translation in progress from www.parisurthar.com
நியாயபிரமானத்தில் பாவநிவாரணபலி குறித்துச் சொல்லும் பொழுது அது மகா பரிசுத்தமானது என்று சொல்லப்பட்டுள்ளது, எப்படி பாவநிவாரணபலி பரிசுத்தமாய் இருக்க முடியும்? அதுவும் மகா பரிசுத்தமானது என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது? - நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது - லேவியராகமம் 6:25
உதாரணத்திற்கு, ஒரு கொலை குற்றவாளி தன் பாவத்தை ஒரு ஆட்டுக்கடாவின் மேல் சுமத்தினால், அந்த ஆட்டுக்கடா எப்படி பரிசுத்தமாருக்க முடியும், இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் ஆச்சே - குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது - லேவியராகமம் 7:1
இது பரிசுத்த தேவனே, நமது பாவநிவாரணபலியாகவும் குற்றநிவாரணபலியாகவும் வந்தால் மாத்திரமே கூடும் - என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் - லேவியராகமம் 20:8
இதை தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார் - நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார் - I யோவான் 2:2